shadow

ஜார்கண்ட்: சுரங்கம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து. தொழிலாளர்கள் கதி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் ஒன்றில் தொழிலாலர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடிரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் 50 தொழிலாளர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சபடுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மீட்பு படையினர் சுரங்கத்தை நோக்கி விரைந்துள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் விரைவில் பாட்னாவில் இருந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் இணைவார்கள் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லால்மேட்டியா என்ற பகுதியில் இந்த சுரங்கம் செயல்பட்டு வருகிறது

Leave a Reply