மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி தீவிரவாதி துண்டாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி டெல்லி போலீசார் நீதி மன்றத்தை நாடியுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் தேதி இந்திய& நேபாளம் எல்லையில் தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா கைது செய்யப்பட்டார் . 70 வயதான இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர். இந்நிலையில், டெல்லி போலீசார் தீவிரவாதி துண்டாவுக்கு உண்மையை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் எனக்கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகள் தொடர்பு குறித்து இவரிடம் அறிய முடியும். துண்டா கூறும் தகவல்கள் மிகுந்த எச்சரிக்கை விடும் தகவல்களாகவே உள்ளது. மேலும் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து தெரிந்து கொள்ள, அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.