தமிழ் சினிமா உலகின் ப்ளே பாய் என பெயர் பெற்ற ஆர்யா, சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் இன்னும் தனது கனவு தேவதையை சந்திக்கவில்லை என்றும், அதனால் இதுவரை தன்னுடைய வாழ்வில் காதல் என்பதே நுழையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

என் கேரக்டருக்கு லவ் மேரேஜ்தான் செட் ஆகும். ஆனா, எனக்கு ஏத்த ட்ரீம் கேர்ளை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. சும்மா விளையாட்டுக்குச் சொல்லலை. எனக்குக் காதல் வந்தா அதை மூடி மறைக்கவா போறேன். கிசுகிசுவெல்லாம் கிளம்புறதுக்கு முன்னாடியே, ‘இதுதான் என் ஆளு’னு முதல் ஆளா நானே சொல்வேன். இவ்வாறு ஆர்யா பதில் கூறியுள்ளதால் இதுவரை ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளை எல்லாம் தான் காதலிக்கவில்லை என்பதை மறைமுகமாக சொலிவிட்டார்.

மேலும் தன்னை பற்றி வரும் கிசுகிசு பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த ஆர்யா, ஒரு நடிகனுக்கு கிசுகிசுவே வரவில்லை என்றால் அந்த நடிகன் பீல்டில் இல்லை என்று அர்த்தம். கிசுகிசு வந்தால்தான் நடிகன் என்று கூலாக கூறியுள்ளார்.

Leave a Reply