shadow

Read-AAP-list-o16224

சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் கட்சியின் அனுமதியின்றி திடீரென போட்டியில் இருந்து விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ரேபேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை  எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அஜய் அகர்வால், மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முன்னாள் நீதிபதி பக்ரூதீன் ஆகியோர் போட்டியிட்டனர். இருவரும் அந்த பகுதியில் பிரபலமானவர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பக்ருதீன், திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தனிப்பட்ட முறையில் தானே எடுத்த முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆம் ஆத்மி தற்போது சமூக சேவகர் அர்ச்சனா ஸ்ரீவத்சவா என்பவரை சோனியா காந்திக்கு எதிராக நிறுத்தியுள்ளது.

Leave a Reply