shadow

delhi electionடெல்லியில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேதான் போட்டி நடைபெறுவதாகவும், மூன்றாவது இடத்தில்தான் காங்கிரஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வித்தியாசமான மற்றும் அதிரடி அறிவிப்புகள் உள்ள அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

*டெல்லியில் பெண்கள் பாதுகாப்புக்கு 15 லட்சம் கேமராக்கள் பொருத்தப்படும்

* 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.

* டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

*கல்வி, சுற்றுலா, வர்த்தகம், பிற சேவை துறைகள் மேம்படுத்தப்படும்.

*வேலைவாய்ப்பு பெருக்கப்படும்.

*டெல்லியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது வரம்பு 60 ஆக இருக்கும்.

*அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி, மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.

*யமுனை நதியில் குப்பைகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்படுகிறது

*அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும்

*நில கையகப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள்

*விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகளுக்கான மானியம் வழங்கப்படும்

*தலைநகரில் வாட் வரி குறைக்கப்படும். இதன்மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்

*கல்வி முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் கல்வி முறை அமையும்.

*டெல்லியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மாதத்துக்கு 20,000 லிட்டர் தண்ணீர் கிடைக்க உறுதி செய்யப்படும்.

*டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிவறைகள் கட்டப்படும். இவற்றில் சேரிப் பகுதிகளில் 1.5 லட்சம் கழிவறைகளும், ஜெ.ஜெ.தொகுப்பு வீடுகள் பகுதியில் 50,000 கழிவறைகளும் கட்டப்படும்.

*மேல்நிலை, உயர்நிலைக் கல்விக்கு சிறப்பு கூர்நோக்கு கவனம் செலுத்தும் வகையில் 500 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்

*900 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

*டெல்லி மருத்துவமனைகளில் கூடுதலாக 30,000 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்

*பெண்கள் பாதுகாப்புப் படை (மஹிளா சுரக்‌ஷா தல்) உருவாக்கப்படும்.

*டெல்லியில் பொது இடங்களில் வை-பை சேவை இலவசமாக வழங்கப்படும்.

*போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்படும்.

*வனம், சுற்றுச்சூழல் பகுதிகள் பாதுகாக்கப்படும்

*முதியோர் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்

*பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதிவிரையில் நியாயம் கிடைக்கும் வகையில், 47 பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

*1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

 

Leave a Reply