shadow

9வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடும், 22 வேட்பாளர்கள் அடங்கிய 13-வது பட்டியலை ‘அக்கட்சியின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதில் பிரபல நடிகர் ஜாவீத் ஜாப்ரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்கை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரதிய ஜனதா அதிர்ச்சியடைந்துள்ளது.

அதேபோல அத்வானியை எதிர்த்து ரிதுராஜ்பாய் மெகதா என்பவர் காந்தி நகரிலும், சரத் யாதவ்வை எதிர்ட்து அன்வர் ஆலம் என்பவர் மாதேபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தின் ஐந்து வேட்பாளர்களையும் நேற்று அறிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் வசிகரன், தஞ்சாவூரில் பழனிராஜன், கரூரில் வளையாபதி, வடசென்னையில் ஸ்ரீனிவாசன், சிவகெங்கையில் தமிழ் அரிமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதுவரை 407 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இன்னும் 93 வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி மொத்தம் 500 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply