shadow

ராக்கி கயிறு கட்டவும் ஆதார் அவசியமா?

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்த பண்டிகையின்போது பிரதமர் மோடிக்கு பலர் ராக்கி கயிறு கட்டினர்

இந்த நிலையில் பிரதமருக்கு ராக்கி கயிறு கட்ட வரிசையில் நின்ற ஒரு சிறுமியின் கையில் ஆதார் அட்டை இருந்தது. இதனால் பிரதமருக்கு ராக்கி கயிறு கட்ட ஆதார் அவசியமா? என்ற தகவல் சமூக இணையதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பிரதமர் அலுவலகம் பிரதமருக்கு ராக்கி கயிறு கட்ட வரும் அனைவரும், தங்கள் பற்றிய அடையாளத்தை காண்பிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. இது, வழக்கமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையே.

பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய சிறுமி, தான் எடுத்து வந்திருந்த,ஆதார் கையில் வைத்திருந்தார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதுடன், ஆதார் கட்டாயம் என்ற வகையில்,வீண் வதந் தியும் பரவியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply