ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இதுவரை கிடைக்காதவர்கள் உடனடியாக அஞ்சலகத்தை அணுகும்படி இந்திய அஞ்சல்துறை இன்று அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை சரியான விலாசம் இல்லாததால் உரியவர்களிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது என்றும், இதுவரை ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் உடனடியாக அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள அஞ்சலகத்தை அணுகி, உரிய ஆவணங்களை காண்பித்து ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று அஞ்சலக அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது
குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் பெற்றுக்கொள்ளாதவர்களின் ஆதார் அட்டைகள் திருப்பி அனுப்பப்பட உள்ளதால், உடனடியாக ஆதார் அட்டையை அஞ்சலகத்தில் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.