shadow

லாரி மோதி பலியான ரசிகர்களின் குடும்பத்தினர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்

vijay 1 vijay 2 vijay 3 vijayஇளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸான நிலையில் இந்த படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வம் கொண்டனர். இந்நிலையில் ‘புலி’ படத்தை பார்க்க தாம்பரம் பகுதியை சேர்ந்த செளந்திரராஜன், உதயகுமார் ஆகியோர் கடந்த 1ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்றின்மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கேள்விப்பட்ட விஜய், இன்று காலை 6மணிக்கு மரணம் அடைந்த இரண்டு ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பெரும் தொகை ஒன்றினையும் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும் வேறு என்ன உதவி தேவையென்றாலும் தன்னை தயங்காமல் அணுகவும் என்றும் கூறிவிட்டு மரணம் அடைந்த ரசிகர்கள் இருவருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்.

ரசிகர்கள் மீது பெரும் அன்பு வைத்திருக்கும் விஜய், ரசிகர்களை ரசிகர்களாக மட்டும் கருதாமல் தனது குடும்பத்தினர் போல் நடத்தியதை பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் அவரை வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய்யின் இமேஜ் பலமடங்கு உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply