டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு திருடிய 3 பேர் கைது
ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகளில் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டு வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே திருவண்ணாமலை அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் லட்சக்கணக்கான மதிப்புள்ள டாஸ்மாக் மது பாட்டில்கள் கொள்ளையடித்த செய்தியைப் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை 3 பேர் கொள்ளையடித்துள்ளனர்
இது குறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மூவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.