shadow

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆகிய இருவரது வீட்டில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்த ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் வாட்ஸ்அப் தகவல்கள் சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் அடிப்படையில் தற்போது ஷாருக்கான் மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரது வீட்டிலும் சோதனை நடந்து வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் சிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் கூறியுள்ளன