shadow

vijay and murugadossகத்தி படப்பிடிப்பில் விஜய்க்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் கடும் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் விஜய் படப்பிடிப்பில் இருந்து கோபமாக வெளியேறியதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த வாரம் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோ ஒன்றில் கத்தி படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தயாரிப்பாளர் பிரச்சனை குறித்து விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் விவாதித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முருகதாஸுடன் கோபமாக பேசி விஜய் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும், இதனால் படப்பிடிப்பு கேன்சல் ஆனதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மறுநாள் படப்பிடிப்பிற்கு விஜய் வந்தபோது ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றும், முருகதாஸின் உதவியாளர்களே அன்றைய படப்பிடிப்பை நடத்தினார்கள் என்றும் கூறப்படுகிறது.

கத்தி படத்தின் தயாரிப்பாளர் லண்டனில் இருக்கும் விஜய்யின் மாமனாருக்கு கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் தயாரிப்பாளர் பிரச்சனையை விரைந்து முடிக்குமாறு விஜய் முருகதாஸ் இடம் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு எனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என் வேலை படத்தை இயக்குவது என்பதே என்று கூறியதால் விஜய் கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக முருகதாஸ் படத்தில் இருந்து விலக இருப்பாதாகவும், மீதிப்படத்தையும் படத்தின் மற்ற போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை தயாரிப்பாளர் வேறு நபரை வைத்து முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply