ஸ்டாலினுக்கு எதிராக திடீரென சுவரொட்டி ஒட்டிய நாடார் சமூகத்தினர்: பரபரப்பு தகவல்
ராஜ்யசபா தேர்தலில் தங்கள் சமூகத்திற்கு திமுக பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதை கண்டித்து நாடார் சமூகத்தினர் திடீரென சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளராக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியவர்களை சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பிறகு நாடார் சமூகத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
மூன்று தொகுதிகளில் ஒன்றைக்கூட நாடார் சமூகத்திற்கு தரவில்லை என அவர்கள் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.அதேபோல் இஸ்லாமியர்களும் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நாடார் சமூகத்தினர் திடீரென சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறி போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.