shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் செய்யும் புதுமை

சென்னை ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தேர்தல் ஆணையமும் சுறுசுறுப்படைந்துள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு புதிய முயற்சியை தேர்தல் ஆணையம் கையாள உள்ளது.

அதாவது யாருக்கு வாக்களித்தோம் என்கிற ஒப்புகைச் சீட்டு அளிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆர்.கே.நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யலாம்.

ஆனால் அதே நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களால் வாக்காளார்களுக்கு இந்த புதிய முறையால் இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply