திடீரென போடப்பட்ட மாவுக்கட்டு:

செல்போன் மூலம் போலீசாருக்கு சவால் விடுத்த போலி சமூக ஆர்வலர் ஒருவருக்கு மாவுக்கட்டுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை அம்பத்தூரை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அவரிடமிருந்து மதுபாட்டில்கள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை

இதனால் ஆவேசமடைந்த தேவேந்திரன் தன்னிடம் போலீசார் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு ஆடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்

இந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மீண்டும் தேவேந்திரனை சோதனை செய்ய வந்தபோது அவர் மது விற்பனை செய்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தப்பி ஓடியதாகவும் அதனால் அவர் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மாவு கட்டு போடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply