அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு! மாணவர்கள் கதி என்ன?
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் வெறித்தனமான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு பள்ளி மாணவர்கள் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள பார்க் லேண்ட் என்ற பகுதியில் மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதலின்போது ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளியினுள் இருந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக போலீஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இந்தச் சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவலின்படி 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.