shadow

building 13(2)
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த கோர விபத்தில் மிகவும் திறமையாக மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர்கள் அனைவருக்கும் பாராட்டு விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாரட்டு விழா நாளை நடைபெறுகிறது.
 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம், போரூர் அருகே முகலிவாக்கத்தில் தனியார் ஒருவரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் மீட்புப்பணி நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மிகச்சிறப்பாக செயல்படுத்தியது.

மேலும், சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த மீட்புப்பணி குழுவினருக்கு  நாளை பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை ஜவஹர்லார் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. முதல்வர் ஜெயலலிதா, மீட்புப்பணி குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply