shadow

‘புலி’ ஆடியோ விழாவில் திடீர் மாற்றம்? விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
puli
விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரமாண்டமாக மகாபலிபுரம் அருகேயுள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெறவுள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்வித்த நிலையில் தற்போது வந்துள்ள இன்னொரு தகவல் விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தனியார் ரிசார்ட்டில் இந்த விழா நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி ரசிகர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று ‘புலி’ படத்தின் பாடல்கள் மட்டுமே ரிலீஸ் ஆகிறது என்றும், அன்றையை தினம் டிரைலர் வெளியாகாது என்றும் கூறப்படுகிறது. இதுவும் விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் ‘புலி படத்தின் ஆடியோ விழாவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த விழாவில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, பிரபு ஆகியோர் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு திரையுலக இரு மெகா ஸ்டார்கள் கலந்து கொள்ள இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply