shadow

சசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில் பார்த்தேன்: காங்கிரஸ் பிரமுகர் அதிர்ச்சி தகவல்

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, சிறைக்கு வெளியே சென்று வருவதாக வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சசிகலா தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் சில குறைகளைச் சுட்டிக்காட்டி மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில், ”சசிகலா சிறையில் விதிகளை வளைக்கப் பணம்கொடுத்தது, வெளியே சென்று வந்ததது போன்ற வீடியோ காட்சிகள் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அந்த கடிதத்தில் ‘ஒருமுறை, சசிகலாவை ஆர்.என்.ஜி சாலையில் பார்த்தேன் என்றும், அதைக் கண்டு தாம் அதிர்ச்சியுற்றதாகவும் தெரிவித்துள்ளாராம். மேலும், அதுகுறித்து வெளியில் சொன்னால் நம்மைத்தான் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் அமைதியாக இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதிலிருந்து சசிகலா ஷாப்பிங் தவிர வேறு எங்கெல்லாம் சென்றார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Leave a Reply