திரைக்கு வராத படத்தின் டிக்கெட்டை விற்று ரூ.6 லட்சம் மோசடி செய்தாரா பிரபல நடிகர்?

திரைக்கு வராத படத்தின் டிக்கெட்டை கொடுத்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே. மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிமுகமான நடிகர் ஆர்.கே, தான் நடித்த வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் 600 டிக்கெட்டுகளை, தலா 1000 ரூபாய்க்கு மொத்தமாக தன்னிடம் விற்றதாகவும், ஆனால் அந்த படம் வெளிவரவே இல்லை என்றும் இதனையடுத்து 6 லட்சம் ரூபாயை நடிகர் ஆர்கே மோசடி செய்ததாகவும் திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் கோவிந்தராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் ஆர்.கே. தன் மீது புகார் தெரிவித்துள்ள நபரை தனக்கு தெரியாது என்றும் லோக்கல் வினியோகஸ்தருடனான பிரச்சனையில் தன்னை தேவையில்லாமல் இழுத்து விட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply