பரபரப்பு தகவல்

திருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிடைத்த நன்கொடை நிலங்கள் ஏலம் விடப் போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தங்களுக்கு கிடைத்த நன்கொடை நிலங்களை விற்பனை செய்யக்கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிலங்களை விற்பனை செய்ய ஆந்திர அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த பொதுநல வழக்கு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply