shadow

சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்கு: திருச்சி போலீசார் அதிரடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விமானம் மூலம் நேற்று திருச்சி வந்த நிலையில் அவர்களை வரவேற்க இரு கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி விமான நிலைய போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் பிரபு உட்பட 8 பேர் மீது பிரிவுகள் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே போல் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி விமான நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply