shadow

ஓ.பன்னீர்செல்வம் பதவி செல்லாது: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவியேற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோது துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்று கொண்டார். ஆனால் அவரது பதவியேற்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது இன்று அல்லது நாளை தெரியும் என்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply