shadow

revathi and urvashiகமல்ஹாசனின் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடிகைகள் ரேவதி மற்றும் ஊர்வசி ஆகியோர் இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும் இவர்கள் மலையாள திரைப்படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கவுள்ளனர். இவர்களுடன் நடிகை மஞ்சுவாரியரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை ‘ஒன் பை டூ’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் அரவிந்த் இயக்கி வருகிறார். இந்நிலையில் கேரள தயாரிப்பாளர் சங்கமும், கேரள தியேட்டர் உரிமையாளர் சங்கமும் இந்த படத்திற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அருண்குமார் அரவிந்த் இயக்கிய முந்தைய படமான ஒன் பை டூ’ படத்தின் தயாரிப்பாளர் ராகேஷ், அருண்குமார் மீது தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் ஒன்றை கொடுத்திருப்பதாகவும், அந்த புகாரின் அடிப்படையில் அருண்குமார் தற்போது இயக்கி வரும் படத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அருண்குமார் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அருண்குமார் இயக்கவுள்ள புதிய படத்தின் படக்குழுவினர் மற்றும் அவருடைய நண்பர்கள் அவருக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்றும் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று அவர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது. கேரள பிலிம் மேக்கர்ஸ் அசோசியேஷனான FEFKA அமைப்பும் அருண்குமாருக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply