shadow

nayantara_hd-normalநயன்தாரா நடிக்கும் “நைட் ஷோ’ என்ற மர்ம படத்தின் படப்பிடிப்பில், திடீர் விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தி ஹீரோ ஆரியின் தோள்பட்டை இறங்கியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

நடிகைநயன்தாரா தற்போது நண்பேண்டா.நைட் ஷோ, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தில் ‘நைட் ஷோ என்ற திகிலும் மர்மமும் கொண்ட  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ’நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஆரி நடிக்கிறார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பொழிச்சலூரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன் தினம் நடந்தது.

காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் ஹீரோ ஆரி வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சிக்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மற்றும் ;அறிவு ஆகிய இருவரும் சண்டைக்காட்சியை அமைத்து வந்தனர். அப்போது உயரமான ஒரு இடத்தில் இருந்து ஒரு  குழிக்குள் ஆரி குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆரி குழிக்குள் குதிக்கும்போது டைமிங் மிஸ் ஆனதால் அவருடைய தோள்பட்டை திடீரென இறங்கியது.

இதனால் சம்பவ இடத்தில் ஆரி வலி தாங்காமல் கதறினார். அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருடையை தோள் பட்டையில் கட்டு போடப்பட்டது.  ஒரு வாரம் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியதன் பேரில், ஆரி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

Leave a Reply