shadow

angelina jolieபிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏற்கனவே ஆறு குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவர்களில் முன்று குழந்தைகள் தத்து எடுத்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏஞ்சலினா ஜோலி-பிராட்பிட் தம்பதிகள் மீண்டும் ஒரு குழந்தையை தத்தெடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சிரியாவுக்கு அடிக்கடி சென்று சமூகநல சேவைகள் செய்து வரும் ஏஞ்சலினா ஜோலி, அங்குள்ள குழந்தைகளின் நலனுக்காக பல உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சிரியா நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுக்க உள்ளதாகவும், இதுகுறித்த சட்டபூர்வமான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏஞ்சலினா ஜோலி தற்போது மடோக்ஸ் சிவான் ஜோலி-பிட், பாக்ஸ் தியென் ஜோலி-பிட், சகரா மர்லே ஜோலி-பிட், ஷிலோ நோவெல் ஜோலி-பிட், நாக்ஸ் லியோன் ஜோலி-பிட், விவியென் மர்செலின் ஜோலி-பிட் என்ற ஆறு குழந்தைகளுடனும் கணவர் பிராட் பிட் அவர்களுடனும் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் புற்றுநோய் காரணமாக அவர் தன்னுடைய கர்ப்பப்பையை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply