அரையிறுதியில் அபார வெற்றி. இறுதிக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

champion leagueநேற்று ஐதராபாத் நகரில் நடந்த சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை பந்தாடிய சென்னை அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 182 ரன்கள் குவித்தது. பிராவோ 67 ரன்கள், டிபிளஸ்ஸிஸ் 46 ரன்கள் மற்றும் ஜடேஜா 27 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் அவானா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மில்லர் 22 ரன்களும், பட்டேல் 31 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் நெஹ்ரா, ஷர்மா, நேகி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைவீழ்த்தினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை அணியின் பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை பெங்களூரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் பலப்பரிட்சை நடக்கவுள்ளது.

Leave a Reply