பேச்சிலர் இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த பிரபலம் தான் ஹீரோவா?

சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஜீவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ திரைப்படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார்

இவர் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் படத்திலேயே சிக்சர் அடித்த சதீஷ் செல்வகுமார் கார்த்தியுடன் இணையவுள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் கார்த்தி, ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ ஆகிய திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பதும் தற்போது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.