92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவு
தமிழகத்தில் 92 பொறியியல் கல்லூரிகள் பாடத்திட்டங்களுக்கான முறையான உட்கட்டமைப்பு வசதி , ஆய்வக வசதி, போதிய பேராசிரியர்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனால் வசதி குறைவான அந்த 92 கல்லூரிகளில் 50 சதவீதம் மாணவர் சேர்க்கையை குறைக்க அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 537 பொறியியல் கல்லூரிகளில், 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதியை புதுப்பிக்கவில்லை. இதனால் இந்த கல்லூரிகளில் புதிதாக இந்த ஆண்டிற்கான சேர்க்கையை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த 22 கல்லூரிகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.