shadow

90ஐ தொட்டது பெட்ரோல் விலை: மகாராஷ்டிராவில் மக்கள் அவதி

பெட்ரோல் விலை தினம் தினம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ரூ.84.05க்கு விற்பனையாகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற நகரங்களில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்றைய பெட்ரோலின் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பாணி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் 11 காசுகளுக்கும், டீசல் 78 ரூபாய் 6 காசுகளுக்கும் விற்பனையானது. இந்தியாலேயே பர்பானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பதால், அங்குள்ள வாகன ஓட்டிகள் விழிபிதுங்கியுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் சட்டப்பேரவை நடைபெறும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply