shadow

9 கோடி கேட்கும் ஷங்கர்! ரூ.2 கேட்கும் வடிவேலு: இம்சை அரசனின் இம்சைகள்

வடிவேலு நடிப்பில் இயக்குனர் சிம்புதேவன் ‌இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இந்த படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட அதே படக்குழுவினர்கள் கடந்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி 8 நாட்கள் சென்ற நிலையில் வடிவேலு படக்குழுவினரிடம் கோபம் கொண்டு படப்பிடிப்பை புறக்கணித்து விட்டார். ஆடை வடிவமைப்பாளரில் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.

விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தொடக்கத்தில் பிடி கொடுக்காமல் பேசிய வடிவேலு இப்போது மேலும் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறி இருக்கிறார். இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறது தயாரிப்பாளர் சங்கம். விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply