shadow

மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி திறப்பு: வெள்ள எச்சரிக்கையால் பரபரப்பு

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கர்நாடக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் கூறியது. ஆனால் தற்போது கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் மிக அதிகளவு உள்ளது மேட்டூர் அணைக்கு மட்டுமே வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு வந்துவிட்டதால் தற்போது உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று மாலை 40 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் நீரின் வரத்து அதிகரிக்க அதிகரிக்க வெளியேற்றும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. நேற்று இரவு மட்டும் சுமார் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply