80 வயதிலும் சொந்த தொழில் செய்து உழைக்கும் பாட்டி!

புனேவில் உள்ள இந்த பாட்டிக்கு வயது 80. இந்த தள்ளாத வயதில் தன்னை கவனைத்து கொள்ள யாரும் இல்லை என்றாலும் மன உறுதி மற்றும் உழைக்கும் தன்னம்பிக்கை இவரிடம் அதிகம் உள்ளது. தன்னுடைய அடிப்படை தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்க்காமல் காலை முதல் மாலை வரை இவர் உழைத்து வருகிறார்.

புனேவில் பிளாட்பார ஓட்டல் ஒன்றை நடத்தி வரும் இவர் தானே உணவுகளை சமைத்து, அவரே பரிமாறுகிறார். இதில் கிடைக்கும் பணத்தில் தனது தேவைக்கு போக, மீதியை சமூக சேவைகளுக்கும் பயன்படுத்துகிறார். இந்த பாட்டியின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் போடலாமே!

Leave a Reply