shadow

திருப்பதி அன்னதான திட்டத்திற்கு 8 டன் காய்கறி நன்கொடை வழங்கிய பக்தர்
tirupathi
திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அன்னதான திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கோவில் வருமானத்தில் இருந்து செலவு செய்யப்பட்டு வந்தாலும் பல பக்தர்கள் லட்சக்கணக்கில் பணமும், பொருளும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த கந்தாராவ் என்னும் பக்தர் 8 டன் காய்கறிகளை திருப்பதி கோவிலின் அன்னதான திட்டத்திற்கு வழங்கியுள்ளார். இந்த காய்கறிகள் ஏற்றிய வாகனத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அன்னதான திட்டத்திற்கு காந்தாராவ் போல பலரும் காய்கறிகள் உள்பட உணவுக்கு தேவையான பொருட்களை நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

Leave a Reply