shadow

போபால் சிறையில் இருந்து தப்பிய 8 தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்த போலீஸார்.

terroristsஇன்று காலை போபால் சிறையிலிருந்து கடுமையான பாதுகாப்பையும் மீறி தப்பியோடிய 8 சிமி தீவிரவாதிகளை மத்திய பிரதேச காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் போபால் சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிவிட்டு பெட்ஷீட் உதவியால் சுவர் மீது ஏறி 8 சிமி பயங்கரவாதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மத்திய பிரதேச காவல்துறையினர் தப்பியோடி சிமி தீவிரவாதிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்நிலையில் தப்பியோடிய தீவிரவாதிகள் போபால் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள எயின்கேடி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்பட்ட 8 தீவிரவாதிகளும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உள்பட நாடு முழுவதும் பல்வேறு நாச வேலைகள் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply