shadow

8 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது

தலைநகர் டெல்லி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தலைமையான நகராக உள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் 8 மாத பெண் குழந்தையுடன் பாலுறவு கொண்ட கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குழந்தைக்கு நெருங்கிய உறவினரான 28 வயது நபர், குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென பெட்ரூமுக்கு அழைத்து சென்று பாலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.,

தற்போது அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண் ஆர்வலர்கள் ஆத்திரத்துடன் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றன்ர.

Leave a Reply