முழுமையாக முடிவுக்கு வந்தது மெரீனா போராட்டம்
கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் மற்றும் எழுச்சி போராட்டம் நேற்று முன் தினம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தபோதிலும் ஒருசில மாணவர்கள் குழுக்கள் போராட்டத்தை நீடிப்பதாக தெரிவித்திருந்தனர். அவர்கள் கடல் அருகே சென்றுவிட்டதால் அவர்களை எப்படி வெளியேற்றுவது என்று போலீசார் திணறி வந்தனர்.
ஜல்லிக்கட்டு குறித்த தற்காலிக சட்டம் தேவையில்லை என்றும் அதற்கு நிரந்தர சட்டம் வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்த மாணவர்கள் தொடர்ந்த நிலையில் நேற்று அவர்களிடம் போலீசார் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் நேற்றிரவு கலைந்து சென்றனர்.
எனவே தற்போதைய சூழ்நிலையில் மெரீனாவில் எந்த போராட்டக்காரர்களும் இல்லை. இருப்பினும் நாளை குடியரசுதின விழா நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்துக்களும் அந்த பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.