shadow

8 வழி சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன்; ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கைது

சென்னை-சேலம் 8 வழி சாலை அமைத்தால் 8 பேரை கொல்வேன் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சர்ச்சைக்குரிய வகையில் 16 பேரை கொல்வோம் என பேசியதாக வந்த புகாரின் பேரில் இன்று அதிகாலையில் ஆம் ஆத்மி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனை சேலம் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

எட்டுவழிச்சாலைக்கு ஆதரவாகவும், நிலத்தை கையகப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரனை சேலம் காரியாப்பட்டி போலீஸார் சென்னையில் வந்து கைது செய்து அழைத்துச்சென்றனர்.

சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக அறிக்கையின் வாயிலாக, சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாகவும் பதினாறு பேரை வெட்டுவேன் என என அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி இன்று காலை வசீகரன் மதுரவாயிலில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது காரியப்பட்டி போலீஸார் வசீகரமன் மீது 153,183,189, மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் இன்று சென்னை வந்த சேலம் காரியாபட்டி போலீஸார் அண்ணா நகர் போலீஸார் உதவியோடு மதுரவாயலில் வசிக்கும் வசீகரனை கைது செய்து சேலம் அழைத்து சென்றனர்

Leave a Reply