8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30 மணிக்கு மின்னணு இயந்திர வாக்குகள்: சத்யபிரதா சாஹூ

ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும் என்றும், தபால் வாக்குகளை எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பின் மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

மேலும் மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த பின்னரே ஒப்புகைச்சீட்டுக்கள் வாக்குகள் எண்ணப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply