8 வழிச்சாலை மேல்முறையீடு: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
8 வழிச்சாலை விவகாரத்தில் மேல்முறையீடு செய்த மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பது பெரும் துரோகம் என்றும், எடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் மீண்டும் துவங்கிவிட்டது என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக எட்டு வழிச்சாலைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.