அதிர்ச்சி தகவல்

உத்தர பிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளி பிரபாத் மிஸ்ரா என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது

விகாஸ் துபே மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகல் ஆலயத்திற்கு சென்றிருந்த போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலாளிகள் அவரை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது

இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோது விகாஷ் துபே கூட்டாளி தப்பிக்க முயன்றதாகவும், இதனால் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டதாகவும் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply