8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு: அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும் என்றும், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.