ஐ.பி.எல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று  புவனேஸ்வர் நகரில்,,, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீநிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஸ்ரீனிவாசன், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 7வது ஐ.பி.எல் தேதியை முடிவு செய்வது என்றும், முடிந்தவரை போட்டிகளின் சில பகுதிகளையாவது இந்தியாவில் நடத்த முயற்சி செய்வோம் என்று கூறப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தினால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என மத்திய அரசு அறிவித்ததையொட்டி, எந்த நாட்டில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தங்களது முடிவை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்

தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்றும், அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் மட்டும் இந்தியாவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply