லண்டன் கேம்ப்டன் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சில நாட்களாகவே தீவிபத்து மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்ப்டன் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற, சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த கேம்ப்டன் மார்க்கெட்டில் சுமார் 1000க்கும் அதிகமான கடைகள் உள்ளது. ஒரு வருடத்திற்கு 28 மில்லியன் சுற்றுலா பயணிகள் இந்த மார்க்கெட்டை பார்வையிடுவதற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கேம்ப்டன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை திடீரென பயங்கர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.