shadow

buildingஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து சமீபத்தில் பிரிந்த சீமாந்திரா மாநிலத்தில் உள்ள  நவாப்பேட்டை என்ற கிராமத்தில் விபத்து ஒன்றில் பலியானவரின் இறுதிச் சடங்கைக் பார்க்க வேடிக்கை பார்த்த 7 பேர்  எதிர்பாராத விபத்தில் ஒன்றில் பலியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நவாப்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சீவநாயுடு என்பவர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய இறுதிச்சடங்கை வேடிக்கை பார்க்க பெருமளவு மக்கள் கூடினர். இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தின் அருகிலுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றின் மீது ஏறி நின்று இறுதிச்சடங்கை வேடிக்கை பார்த்தபோது திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 7 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1jPVQB9″ standard=”//www.youtube.com/v/QNEiYHsQZoU?fs=1″ vars=”ytid=QNEiYHsQZoU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8483″ /]

Leave a Reply