7 பேர் விடுதலை விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி அந்த தீர்மானத்தை ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தது

ஆனால் தமிழக கவர்னர் இதுகுறித்து எந்தவித முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று கூறி 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

 

#SupremeCourt

Leave a Reply