shadow

7 பேர் விடுதலை குறித்து திருநாவுக்கரசர் கருத்து : அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவால் அனைவருக்கும் நம்பிக்கை வந்துள்ளது.

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை ஆளூனர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்ததே தவறு; ஆளுநரால் முடிவெடுக்க முடியாததால் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்

இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு, ‘7 பேர் விடுதலைக்கு ராஜீவ்காந்தி குடும்பமே சம்மதம் தெரிவித்த பின், திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply