7 பேரை விடுதலை குறித்து சிறையில் உள்ள ரவிச்சந்திரன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யும் தீர்மானம் அனுப்பப்பட்டு 8 மாதங்களாகியும் ஆளுநர் தாமதிப்பது அதிகார வரம்பினை கேலிக்குரியதாக்குவதாகும் என – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் 7பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ஆளுநர் தங்களின் நிலைப்பாட்டினை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ரவிச்சந்திரன் தமிழக ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply