shadow

இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு தானாகவே முன்வந்து உதவி செய்து வருகின்றன

அந்தவகையில் ஸ்பெயின் நாடு ஏழு டன்கள் மருத்துவ பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது. இது குறித்த தகவலை ஸ்பெயின் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் கொரோனா பாதிப்பு வெகு விரைவில் குறைய வேண்டுமென்று தான் வேண்டிக் கொள்வதாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

ஸ்பெயின் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 7 டன் மருந்துப் பொருள்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply