shadow

69வது சுதந்திர தின விழாவை சீர்குலைக்க விமான கடத்தலா? உளவுத்துறை எச்சரிக்கை

Happy-Independence-Day-2015-3இந்தியாவின் 69வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் சிறப்பான வகையில் கொண்டாட இருக்கும் நிலையில் இந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்திருப்பதாகவும், குறிப்பாக விமானங்களை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் ஒன்றை உளவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

69வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஒருசில விமானங்களைக் கடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இணையாக கடல் வழியிலோ அல்லது வான் வழியிலோ பயங்கரவாதிகள் தாக்க முயற்சிப்பார்கள் என்றும் எனவே பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் அதன் நட்பு அமைப்புகளான இந்திய முஜாஹிதீன் போன்றவை பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுவதையும் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply